states

img

300 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு நோக்கி 10 பயணிகளை ஏற்றிக்கொண்டு கார் சென்று கொண்டிருந்தது.அதிகாலை 1.15 மணியளவில் ராம்பன் மாவட்டத்தின் பேட்டரி சாஷ்மா பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவ குறித்து தகவலறிந்த காவல்துறையினர், பேரிடர் மீட்பு படையினருடன் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கனமழையிலும் தீவிர மீட்பு பணியில் ஈடுப்பட்டு  10 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் இருவர்  ஜம்முவில் உள்ள அம்ப் க்ரோதாவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பல்வான் சிங் (47), பீகாரில் உள்ள மேற்கு சம்பாரனைச் சேர்ந்த விபின் முகியா பைராகாங் என்பது தெரியவந்துள்ளது.

 

;